Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அம்சரா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெடி விபத்து

அம்சரா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெடி விபத்து

By: Nagaraj Sat, 15 Oct 2022 11:19:13 AM

அம்சரா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெடி விபத்து

அங்காரா: துருக்கியின் கருங்கடல் பகுதிக்கு அருகில் பர்டின் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது.


இந்நிலையில் நேற்று மாலை நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் பணிபுரிந்த பலர் சிக்கினர்.

coal,mining,explosions,rescue operations,death toll ,நிலக்கரி, சுரங்கம், வெடி விபத்து, மீட்புப்பணி, பலி எண்ணிக்கை

சுரங்கத்தில் 110க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் பணிபுரிந்த பலர் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர்.

ஆனால் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags :
|
|