Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் திடீரென்று அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் திடீரென்று அதிகரிப்பு

By: vaithegi Sun, 02 Apr 2023 3:21:43 PM

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் திடீரென்று அதிகரிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் திடீரென்று அதிக வேகத்தில் பரவி வரும் நிலையில், மக்கள் தற்போது அச்சத்தில் .. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்து கடந்த சில மாதங்களாகவே தான் மக்கள் பதட்ட நிலையை தாண்டி வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் திடீரென்று சில வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியது.இதையடுத்து ஆரம்பத்தில் மிகவும் குறைவாகவே பதிவாகி வந்த போது பதற்றம் ஏதும் இல்லை. ஆனால் நாட்டின் தினசரி பாதிப்பு 3 ஆயிரங்களை தாண்டியும், தமிழகத்தில் நூறுகளையும் தாண்டி பதிவாகி கொண்டு வருகிறது.

corona,tamil nadu ,கொரோனா ,தமிழகம்

இந்த நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் புதிதாக 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் தற்போது நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 836 ஆகவும், 19 பேர் தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும், நேற்று மட்டும் 3,766 பேருக்கு கொரோனா தொற்று குறித்த சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|