கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீரென அதிகரிப்பு
By: vaithegi Mon, 26 June 2023 09:40:43 AM
சென்னை : தக்காளி விலை கிலோ ₹100ஆக அதிகரிப்பு ... சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் மழையின் காரணமாக 700 டன் மட்டுமே வரவழைக்கப்பட்டு உள்ளது.
எனவே இதன் காரணமாக கடந்த சில தினங்களாக கோயம்பேட்டில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை ஆனது தற்போது உச்சத்தை அடைந்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 70 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இதையடுத்து தக்காளி விலையை போல பீன்ஸ் விலையும் 120 ரூபாயாகவும் , இஞ்சி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கிடங்கு இல்லாததால் குறைந்த அளவில் காய்கறிகளை வரவழைப்பதாலும் விலை உயர்வு என்று கூறப்படுகிறது.