Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகம் தட்டுப்பாடு காரணங்களால் சென்னையில் டீசல் திடீர் தட்டுப்பாடு

கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகம் தட்டுப்பாடு காரணங்களால் சென்னையில் டீசல் திடீர் தட்டுப்பாடு

By: vaithegi Tue, 06 Sept 2022 10:11:43 AM

கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகம் தட்டுப்பாடு காரணங்களால் சென்னையில் டீசல் திடீர் தட்டுப்பாடு

சென்னை: சென்னையில் உள்ள பல பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பங்க்குகளில் 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாகவே டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்குகளில் 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

chennai,diesel ,டீசல் ,தட்டுப்பாடு ,சென்னை

இதை அடுத்து டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகையை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைவதுடன், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும் இதுபற்றி ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரி கூறியதாவது:- கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் டீசல் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தற்காலிகமானது தான். விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என அதிகாரி கூறினார்.

Tags :