மாவீரர் கேப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு சுமந்திரன் அஞ்சலி
By: Nagaraj Sat, 21 Nov 2020 4:26:24 PM
சுடரேற்றி அஞ்சலி... மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில், மாவீரர் கேப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவீரர் வாரமான இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில், தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபடும். இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரி வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் பொலிஸார் மனுத்தாக்கல் செய்தனர்.
அதனடிப்படையில் பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்கியுள்ளது. சில நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் மாவீரர் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளாகும். அதனை முன்னிட்டு, கேப்டன் பண்டிதரின் திருவுருவ படத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.