Advertisement

தமிழ்நாட்டில் கோடை மழை வழக்கத்தை விட அதிகம்

By: vaithegi Wed, 10 May 2023 3:41:09 PM

தமிழ்நாட்டில் கோடை மழை வழக்கத்தை விட அதிகம்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 115% கூடுதலாக பெய்துள்ளது .. பொதுவாக 81 மில்லி லிட்டர் அளவு இயல்பாக மழை பதிவாகும் நிலையில் இந்தாண்டு 124.1 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சூரளக்கோடு பகுதியில் 8 சென்டிமீட்டர், பெருஞ்சாணி அணையில் 6 சென்டிமீட்டர் மழையும், புத்தன் அணையில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

summer rain,chennai ,கோடை மழை,சென்னை

மேலும் வறட்டு பள்ளம் ,தேனி மாவட்டம் தேக்கடி, விருதுநகர், தென்காசி மாவட்டம் அடவிநயனார் கோயில் அணை ஆகியவற்றில் தலா 5 சென்டிமீட்டரும், ஸ்ரீவில்லிபுத்தூர் , திருநெல்வேலி களக்காடு, நீலகிரி மாவட்டம் கூடலூர், குமரி மாவட்டம் பாலமோர் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதனை அடுத்து குறைந்தபட்சமாக ராஜபாளையம், தாராபுரம், திருநெல்வேலி ஒட்டன்சத்திரம், பொன்னமராவதி, முக்கடல் அணை, எடப்பாடி, மஞ்சளாறு, நாகர்கோவில், அம்மாபேட்டை ,நத்தம், நடுவட்டம், பென்னாகரம் ,நாங்குநேரி போன்ற பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.


Tags :