Advertisement

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும்

By: vaithegi Sun, 28 May 2023 11:16:41 AM

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும்

சென்னை: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர். பகல் நேரங்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த வெப்பத்தால் அவதிப்பட்டு வரும் வேளையில் சற்று ஆறுதல் அளிக்கும் தகவலை தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக வருகிற மே. 29, 30, 31 ஆகிய 3 தினங்களும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தகவல் தெரிவித்து உள்ளார்.

summer rain,heat ,கோடை மழை ,வெப்பம்

இதையடுத்து சென்னையின் புறநகர் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் இன்று திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அத்துடன் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 முதல் 65 கி. மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது

Tags :