Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை முடிந்தும் சுட்டெரிக்கும் வெயில்; 11 இடங்களில் சதமடிப்பு

கோடை முடிந்தும் சுட்டெரிக்கும் வெயில்; 11 இடங்களில் சதமடிப்பு

By: Nagaraj Sat, 20 June 2020 10:41:52 AM

கோடை முடிந்தும் சுட்டெரிக்கும் வெயில்; 11 இடங்களில் சதமடிப்பு

மீண்டும் சுட்டெரிக்கிறது வெயில்... தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 28ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. இருப்பினும் தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் அவ்வப் போது மழை பொழிவும் இருந்து வருகிறது.

weil,11 seats,cents,grabbing,hurting,impact ,வெயில், 11 இடங்கள், சதம், வாட்டி வதைக்கிறது, தாக்கம்

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி திருத்தணி 106.7, மதுரை விமான நிலையம் 106.1, நுங்கம்பாக்கம் 105.08, மீனம்பாக்கம் 105.2, நாகை 103.8, திருச்சி 103.2, வேலூர் 102.9, மதுரை பரங்கிப்பேட்டை 102.2, தூத்துக்குடி 101.1, காரைக்கால் 100.4 ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியிருக்கிறது.

Tags :
|
|