நாளையில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
By: vaithegi Thu, 27 Apr 2023 10:30:24 AM
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு நாளையோடு மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதியும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்தன.
இதையடுத்து அதனைத் தொடர்ந்து, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களின் இறுதித் தேர்வுகளையும் 28-ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, நாளையோடு தேர்வுகள் முடிவடைந்து அனைவருக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.
இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது.
அதாவது, கொரோனா பரவல், கோடை வெயில் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏப்ரல் 24 -ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகளை ஏப்ரல் 17-ஆம் தேதி என்று மாற்றி முன்கூட்டியே நடத்த திட்டமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.