Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தெலுங்கானாவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Mon, 13 Feb 2023 7:09:45 PM

தெலுங்கானாவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தெலுங்கானா: இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களும் 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தெலுங்கானாவில் 1-0ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3-ம் தேதி முதல் பொது தேர்வு தொடங்கும். இந்த தேர்வு 13-ம் தேதி நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த தேர்வுகள் முடிவடைந்த பிறகு ஏப்ரல் 25-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெலுங்கானா பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

summer vacation,telangana ,கோடை விடுமுறை,தெலுங்கானா

மேலும் அதிகரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மார்ச் மாதம் 2 – வது வாரத்தில் இருந்து பள்ளிகளில் வகுப்புகள் அரை நாள் மட்டும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :