Advertisement

பஞ்சாபில் ஜூலை 2 வரை கோடை விடுமுறை

By: vaithegi Tue, 30 May 2023 1:53:21 PM

பஞ்சாபில் ஜூலை 2 வரை கோடை விடுமுறை

பஞ்சாப் : இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து 2023 – 24 ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட இருக்கிறது. அதே போல, தமிழகத்திலும் 1 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 29 முதல் மே 31ம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருகிற ஜூன் 5 -ம் தேதி வகுப்புகள் துவங்கும் என்றும், 6 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூன் 1ஆம் தேதி துவங்கும் என்றும்அறிவிக்கப்பட்டது.

summer vacation,punjab ,கோடை விடுமுறை,பஞ்சாப்

இதற்கு இடையே, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் 1 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் ஜூலை 2- ம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை எனவும் ஜூலை 3 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்றும்கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸின் தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

Tags :