Advertisement

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி உட்பட 3 பேருக்கு சம்மன்

By: Nagaraj Thu, 15 June 2023 11:09:28 PM

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி உட்பட 3 பேருக்கு சம்மன்

கர்நாடகா: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது கர்நாடகா சிறப்பு நீதிமன்றம்.

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

rahul,karnataka,special court,defamation case,explanation,summons ,ராகுல், கர்நாடகா, சிறப்பு நீதிமன்றம், அவதூறு வழக்கு, விளக்கம், சம்மன்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரங்கள் தொடர்பாக மூவர் மீதும் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் கேசவ பிரசாத் என்பவர் கடந்த மே மாதம் தொடுத்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே கர்நாடகாவில் நடந்த பேரணியில் மோடி பற்றி அவதூறாகப் பேசியதாக ராகுல் தனது எம்பி பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|