Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்

By: Nagaraj Mon, 13 Feb 2023 10:24:34 PM

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க  மாத்திரைகள் வழங்கல்

திருப்பூர்: நாளை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்... குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவிலியர்கள் நேரில் சென்று வழங்குவார்கள். திருப்பூா் மாவட்டத்தில் 7.8 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

tirupur,students,children,women,tablet ,திருப்பூர், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், மாத்திரை

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரையில் உள்ள 7.8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் 'அல்பெண்டசோல்' மாத்திரை நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படும்.

'' 20 வயது முதல் 30 வயதுடைய பெண்கள் (கா்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மாா்களைத் தவிர) 2.04 லட்சம் பேருக்கும் மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குடற்புழுதொற்றில் இருந்து விடுபட இந்த மாத்திரைகளை உட்கொள்வது அவசியமாகும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|