Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பையிலிருந்து ராணிப்பேட்டைக்கு கூரியரில் போதைப் பொருள் சப்ளை

மும்பையிலிருந்து ராணிப்பேட்டைக்கு கூரியரில் போதைப் பொருள் சப்ளை

By: Nagaraj Mon, 15 May 2023 8:00:16 PM

மும்பையிலிருந்து ராணிப்பேட்டைக்கு கூரியரில் போதைப் பொருள் சப்ளை

மும்பை: கூரியரில் போதைப்பொருள்... மும்பையில் இருந்து ராணிப்பேட்டைக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர்.

courier,drug,police , அதிர்ச்சி, போதைப்பொருள், போலீசார், கூரியர், விசாரணை

கைது செய்யப்பட்ட பூஷண பிரியன், ராஜ்குமார், சரவணன் ஆகிய 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஒன்றரை கிலோ கஞ்சா போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, போதைப் பொருள்கள் மும்பையில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Tags :
|