Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

By: Karunakaran Fri, 05 June 2020 5:51:37 PM

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு மாநில அரசு சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். அப்போது தங்களது கருத்துக்களை ஒவ்வொரு மாநில வக்கீல்கள் தெரிவித்தனர். 21.69 லட்சம் தொழிலாளர்களை உத்தர பிரதேசம் அழைத்து வந்துள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்தது.

மேலும், 20.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக குஜராத் அரசும், 11 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மகாராஷ்டிர அரசும், ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசும், 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசும் தெரிவித்தன.

migrant workers,supreme court,placement,inquiry ,புலம்பெயர் தொழிலாளர்கள், உச்சநீதிமன்றம்,வேலைவாய்ப்பு,விசாரணை

3.97 புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் உள்ளதாக, மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளது. மேலும், 28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாருக்கு திரும்பியுள்ளதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.

இந்த தகவலையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் 9-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags :