Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய நடைமுறை பின்பற்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு

புதிய நடைமுறை பின்பற்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு

By: Nagaraj Fri, 11 Nov 2022 4:54:16 PM

புதிய நடைமுறை பின்பற்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.


உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். பின்னர் வழக்குகளை பட்டியலிடுவதற்கு ஒரு புதிய நடைமுறையை (தானியங்கி) பின்பற்றுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி, திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அடுத்த திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

chief justice,supreme court , உச்ச நீதி மன்றம், தலைமை, புதிய நடைமுறை, வழக்குகள்

அதேபோல், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்பட்ட மனுக்கள் அடுத்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும். இந்த அமைப்பு மனுக்களை பட்டியலிடுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும். அவசர வழக்காக இருந்தால் தனியாக மேல்முறையீடு செய்யலாம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

பதிவாளர் முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைப்படி மனுக்களை பரிசீலிப்பார். மனுக்களில் தவறு இல்லாததால், தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுக்களை பரிசீலித்து குறிப்பிட்ட அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிடுவார்.

Tags :