Advertisement

தேர்தல் நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

By: vaithegi Sat, 09 Sept 2023 11:06:39 AM

தேர்தல் நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து


இந்தியா: இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் பற்றி உச்சநீதிமன்றம் கருத்து ... இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைக்கு, மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது.

இதையடுத்து இத்திட்டம் மூலம் தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டு நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியமாக இருக்கும் என்பதே ஆதரவாளர்களின் கருத்து. ஆனால் இந்த திட்டம் மூலம் செலவுகள் அதிகமாக ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

supreme court,election procedures ,உச்சநீதிமன்றம் , தேர்தல் நடைமுறைகள்


இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது தேர்தல் விவகாரங்களில் பொதுவாக நீதிமன்றங்கள் தலையிடாது.

ஆனால் தேர்தல் நிர்வாக நடவடிக்கைகளில் நேர்மையற்ற தன்மை மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை சீர்குலைக்கும் முயற்சிகள் ஏற்படும் என்றால், அதனை தடுக்க நீதிமன்றங்களின் தலையீடு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :