Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

By: vaithegi Thu, 02 Mar 2023 1:13:53 PM

அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்தியா:செபி அமைப்பு விசாரணை நடத்த உத்தரவு ... பங்குச் சந்தையில் அதானி விவகாரம் பற்றி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளன. பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிவடைந்து கொண்டு வருகிறது.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக இந்த சரிவு ஏற்பட்டது என்பதும் இதனால் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பல வெளியாகி உள்ளன.

supreme court,adani ,சுப்ரீம் கோர்ட் ,அதானி

இந்நிலையில் அதானி ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

இதையடுத்து இது பற்றி நீதிபதிகள் கூறிய போது பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழுவை செபி அமைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் உணர்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :