Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அலுவலக சாவி தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவிப்பு

அலுவலக சாவி தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவிப்பு

By: vaithegi Thu, 18 Aug 2022 1:47:22 PM

அலுவலக சாவி தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவிப்பு

புதுடெல்லி: அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் ஒன்று செய்தார். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

இதையடுத்து அதில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தமது தரப்பையும் கேட்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

supreme court,icourt , சுப்ரீம் கோர்ட்டு,ஐகோர்ட்டு

இதை தொடர்ந்து , அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

Tags :