ஆரணியை சுற்றியுள்ள மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
By: Nagaraj Sat, 27 May 2023 11:58:33 PM
திருவண்ணாமலை: ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கல் தொடர்பாக போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கண்டறிய பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆரணி டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் பூசிமலைக்குப்பம் புதர் பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் சோதனை நடத்திய போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை கண்டுபிடித்து அழித்தனர்.
Tags :