பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் வேண்டும்
By: Nagaraj Wed, 29 June 2022 5:20:57 PM
சென்னை: கட்டாயம் பொருத்த வேண்டும்... தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி வாகனங்களின் முன்பக்கமும், பின்பக்கமும் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், பின்புறமும் சென்சார் கருவியை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகமே பேருந்தில் அழைத்துச்சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டுசென்று விடுகிறது.
விபத்துக்களை இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலகர்களும்,
மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்,
தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார்
கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு
அறிவுறுத்தியுள்ளது.