Advertisement

சூர்யா - இயக்குனர் ஹரிக்கு மத்தியில் கருத்து வேறுபாடு

By: Nagaraj Tue, 25 Aug 2020 9:29:29 PM

சூர்யா - இயக்குனர் ஹரிக்கு மத்தியில் கருத்து வேறுபாடு

சூரரைப் போற்று படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தொடர்பாக சூர்யா - இயக்குனர் ஹரிக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள் என்று ஹரி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆறு, வேல், சிங்கம் 1, 2, 3 என தொடர்ந்து சூர்யாவின் வெற்றிப்படங்களை இயக்கியவர் ஹரி. தற்போது அடுத்தப் படத்திற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முன் வந்துள்ளார் சூர்யா. தயாரிப்பாளராக அவருக்கு நட்டம் ஏற்படும் என்று தெரிந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று ஹரி கூறியுள்ளார். இது தொடர்பாக ஹரி சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதததில் கூறப்பட்டுள்ளதாவது:

surya,good friend,director hari,review ,சூர்யா, நல்ல நட்பு, இயக்குனர் ஹரி, மறுபரிசீலனை

"உங்களுடன் சேர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால் தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம்.

அதை மறந்து விட வேண்டாம். சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோயிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின்ம் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து இருக்கும்," என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

அக்டோபர் 31ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்து இருந்தார் சூர்யா. ஒரு வேளை அந்த முடிவை மாற்றிக் கொள்வதற்காகத் தான் சூர்யா தரப்பிலிருந்து ஹரி இப்படி ஒரு கோரிக்கையை வைத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது. இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையிலும் ஒரு நல்ல நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|