Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வனிதாவை எதிர்த்து வீடியோ வெளியிட்ட சூர்யாதேவி கைதாகி ஜாமீனில் விடுதலை

வனிதாவை எதிர்த்து வீடியோ வெளியிட்ட சூர்யாதேவி கைதாகி ஜாமீனில் விடுதலை

By: Nagaraj Fri, 24 July 2020 10:55:29 AM

வனிதாவை எதிர்த்து வீடியோ வெளியிட்ட சூர்யாதேவி கைதாகி ஜாமீனில் விடுதலை

வனிதா மறுப்பு தெரிவிக்காதவரை எதிர்த்து வீடியோக்கள் வெளியிட்டு வருவேன் என்று கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள சூர்யாதேவி தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தை அடுத்து பல தொடர் சர்ச்சைகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர். அந்த அடிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

அந்த புகாரில் தன்னைக் குறித்து அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது, சூர்யா தேவி புகார் அளித்திருந்தார். இந்த அனைத்து புகார்களும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

surya devi,arrest,vanitha,video,action ,சூர்யா தேவி, கைது, வனிதா, வீடியோ, நடவடிக்கை

சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். இதுபோன்று வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் போலீசார் எச்சரித்தனர். எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த சூர்யா தேவி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பேச வேண்டும் என்றுதான் போலீசார் அழைத்தார்கள். ஆனால், என்னுடைய வழக்கறிஞர் இந்த சமயத்தில் செல்ல வேண்டாம் என்று கூறினார்.

இருப்பினும் எனது வழக்கறிஞரிடம் சமரசம் பேசுவதற்காக தான் வரச் சொல்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இங்கு வந்து பார்த்தால் என்னை கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டார்கள் போலீசார்.

என்னை கண்டதும் வனிதா காலில் இருந்த செருப்பை கழட்டி செருப்பால அடிப்பேன் என்று சொன்னார். அதற்கு நான் எங்கே அடி பார்க்கலாம் என்று சொன்னேன். என்னை மட்டும் இழுத்துச் சென்று ஒரு தனி அறையில் அமர வைத்து விட்டார்கள். நான் அவர் மீது அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நான் கஞ்சா விற்பதாக பொய்யான தகவலை அவர் கூறியிருந்தார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அவரைப் பற்றி நான் தொடர்ந்து வீடியோ போட்டுக் கொண்டுதான் இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|