சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை - சுஷாந்தின் மாமா பேட்டி
By: Monisha Mon, 15 June 2020 09:32:51 AM
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது மாமா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதுபோல் தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும்’ என்றார்.
மேலும், சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் கூறி உள்ளார்.