Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை

By: Karunakaran Fri, 28 Aug 2020 1:15:08 PM

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது, ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறி புகார் அளித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் வந்துள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்ததையடுத்து சி.பி.ஐ. போலீசார் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை பாந்த்ரா காவல் நிலையம், சுஷாந்த் சிங் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

sushant singh rajput,interrogates,riya chakraborty,suicide ,விசாரணை, சுஷாந்த் சிங் ராஜ்புத், ரியா சக்ரவர்த்தி, தற்கொலை

இந்நிலையில் நேற்று நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்காக மும்பை விரைந்துள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடர்பாக நடிகர் ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து இன்று காலை 10.40 மணியளவில் ரியா டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு முன் ஆஜரானார். மேலும், சக்ரபோர்த்தியின் கூட்டாளியான சாமுவேல் மிராண்டாவும் சிபிஐ குழு முன் ஆஜரானார்.



Tags :