Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என அவரது மாமா குற்றச்சாட்டு

சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என அவரது மாமா குற்றச்சாட்டு

By: Karunakaran Mon, 15 June 2020 11:14:30 AM

சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என அவரது மாமா குற்றச்சாட்டு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதனால் அவர் அனைத்து மொழிகளிலும் அறியப்பட்ட நடிகரானார். இந்நிலையில் அவர் மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34 ஆகிறது.

அவரது தீடீர் மறைவு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது தாய்வழி மாமா சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

sushant,suicide,actor,bollywood ,சுஷாந்த், தற்கொலை,பாலிவுட் ,மும்பை

பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில் அவரது தாய்வழி மாமா பேட்டி அளித்தபோது, சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதுபோல் தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்று குற்றமச்சாட்டியுள்ளார்.

மேலும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். சுஷாந்த் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|