Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய கண் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் இடை நிறுத்தம்

தேசிய கண் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் இடை நிறுத்தம்

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:55:25 PM

தேசிய கண் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் இடை நிறுத்தம்

கொழும்பு: இடை நிறுத்தம்... தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று (புதன்கிழமை) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம். தௌபிக் தெரிவித்துள்ளார்.

investigation,health professionals,association,germs,action ,விசாரணை, சுகாதார நிபுணர்கள், சங்கம், கிருமிகள், நடவடிக்கை

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மீளத் திறப்பது தொடர்பில குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில், அறுவை சிகிச்சை அறைக்குள் கிருமிகள் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags :
|