Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பரவல்... சுகாதாரத்துறையினர் ஆய்வு

கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பரவல்... சுகாதாரத்துறையினர் ஆய்வு

By: Nagaraj Fri, 13 Jan 2023 7:11:30 PM

கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பரவல்... சுகாதாரத்துறையினர் ஆய்வு

திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்பிரிக்க நீலம் எனப்படும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பண்ணைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள சுகாதாரத் துறையும், கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர்.


பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் வாத்துக்கள் அழிக்கப்பட்டன. மேலும் அங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணை பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளும் கண்காணிக்கப்பட்டன.

african blue,bird-flu,kerala, ,
கேரளா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்

இந்நிலையில், கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்பிரிக்க நீலம் எனப்படும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பண்ணைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

ஒரு பண்ணையில் இருந்து 70 பன்றிகள் நோய் தாக்கி இறந்தது தெரியவந்தது. மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை நடத்தியது தெரியவந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த பண்ணைகளில் தற்போது 532 பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை அழிக்கும் பணி இன்று தொடங்கியது. இதனை சுகாதாரத் துறை மற்றும் கால்நடைத் துறையினர் இணைந்து மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|