Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடை எடுத்துக்கிட்டு போங்க மக்களே... இரண்டு நாட்கள் இங்கு மழை பெய்யலாமாம்

குடை எடுத்துக்கிட்டு போங்க மக்களே... இரண்டு நாட்கள் இங்கு மழை பெய்யலாமாம்

By: Nagaraj Mon, 06 Nov 2023 6:41:02 PM

குடை எடுத்துக்கிட்டு போங்க மக்களே... இரண்டு நாட்கள் இங்கு மழை பெய்யலாமாம்

சென்னை: இன்றும், நாளையும் இந்த பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு குறித்து வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-: வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

weather,forecast,rainfall,ramanathapuram,thoothukudi,karur ,வானிலை, முன்னறிவிப்பு, மழை பெய்யும், ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர்

இன்று நவ.6 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை நவ.7 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :