Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும்

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 02 Nov 2023 11:29:23 AM

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும்

சென்னை : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (நவ. 2, 3), இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி,திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம்,தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

director,rainfall,chennai zonal meteorological centre ,மழை ,சென்னை மண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர்

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சிலபகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :