வரும் 14ம் தேதி முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
By: Nagaraj Sat, 11 July 2020 3:29:22 PM
வரும் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது. அப்போது கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி கூடுகிறது. இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 2வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில், இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.30 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே அதிக பாதிப்புகள் தென்பட்டு வந்த நிலையில்,
தற்போது அங்கு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால்,
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களை தவிர்த்து மதுரை,
திருவண்ணாமலை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு
தற்போது அதிகரித்துள்ளது.
இது தமிழக அரசுக்கு பெரும் சவாலை
ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி கூடுவதாக
அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.