Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு .. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு .. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By: vaithegi Sun, 01 Jan 2023 6:02:34 PM

தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ..  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: புத்தாண்டை அனைவரும் சிறப்பாக கொண்டாடி வரும் வேளையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் பேரில் அகவிலைப்படி உயர்வு இன்றே அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இது பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருக்கும் பொழுது கூட தொடர்ந்து ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது

m.k.stalin,staff ,மு.க.ஸ்டாலின்,ஊழியர்கள்

எனவே .அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அளித்துள்ள அகவிலைப்படி கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது,அதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட அரசு முடிவு எடுத்துள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி அதிகரிப்பால் 2359 கோடி கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :