தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் கொரானாவுக்கு பலி
By: Monisha Wed, 17 June 2020 1:57:37 PM
தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையும் 528 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று வரை சென்னையில் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.