Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Thu, 24 Aug 2023 11:37:09 AM

சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. எனவே இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டி உள்ளது.

சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் "இந்தியா நிலவில் உள்ளது" என அறிவித்தார்.

chief minister stalin,veeramuthuvel ,முதல்வர் ஸ்டாலின்,வீரமுத்துவேல்


சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவரும், சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அப்போது "தமிழகத்துக்கு வரும்போது உங்களை கண்டிப்பாக பார்க்க வருவேன்" என்று வீரமுத்துவேலிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். தொலைபேசியில் பேசும் வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் வீரமுத்துவேலை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :