Advertisement

பிரதமர் மோடிக்கு தமிழக முதலவர் ஸ்டாலின் கடிதம்

By: vaithegi Fri, 23 Sept 2022 11:01:20 AM

பிரதமர் மோடிக்கு தமிழக முதலவர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: துறைமுக மசோதா 2022இல் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த அம்சங்களை நீக்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் புதியதாக கூறப்பட்டுள்ள துறைமுக மசோதா குறித்தும் அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் கோரிக்கைளை வைத்துள்ளார்.

prime minister mo,stalin,letter ,பிரதமர் மோ, ஸ்டாலின்,கடிதம்

இதனை அடுத்து அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022இல் உள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை வெகுவாக பாதிக்கிறது.

மேலும், இந்த மசோதாவில், கடலோர பகுதிகளில் இருக்கும் சிறு துறைமுகங்கள் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆதலால் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கும் அம்சங்களை மசோதாவில் இருந்து அகற்ற வேண்டும் ‘ என அதில் குறிப்பிட்டுள்ளளார்.

Tags :
|