Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 25 June 2020 10:04:42 AM

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆகரித்துள்ளது.

நேற்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள். மொத்தம் 866 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamil nadu,coronavirus,influence,treatment,kills ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்டம் வாரியாக நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 08
சென்னை - 1654
செங்கல்பட்டு -131
கோவை - 22
கடலூர் - 41
தருமபுரி - 01
திண்டுக்கல் - 13
ஈரோடு - 04
கள்ளக்குறிச்சி - 18
காஞ்சிபுரம் - 66
கன்னியாகுமரி - 22
கரூர் - 09
கிருஷ்ணகிரி - 03
மதுரை- 97
நாகப்பட்டினம்- 62
நாமக்கல் - 01
நீலகிரி - 02
பெரம்பலூர் - 05
புதுக்கோட்டை - 13
ராமநாதபுரம் - 01
ராணிப்பேட்டை - 02
சேலம் - 48
சிவகங்கை - 15
தென்காசி -05
தஞ்சாவூர் - 15
தேனி - 81
திருப்பத்தூர் - 11
திருவள்ளூர் - 87
திருவண்ணமலை - 52
திருவாரூர் - 31
தூத்துக்குடி - 49
திருநெல்வேலி - 32
திருப்பூர் - 01
திருச்சி - 76
வேலூர் - 51
விழுப்புரம் - 34
விருதுநகர் - 40

Tags :