Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை

By: Monisha Fri, 23 Oct 2020 09:48:34 AM

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 3 ஆயிரத்து 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 158
செங்கல்பட்டு - 1,515
சென்னை - 11,107
கோவை - 3,753
கடலூர் - 871
தர்மபுரி - 679
திண்டுக்கல் - 329
ஈரோடு - 867
கள்ளக்குறிச்சி - 284
காஞ்சிபுரம் - 630
கன்னியாகுமரி - 630
கரூர் - 310
கிருஷ்ணகிரி - 650
மதுரை - 742
நாகை - 479
நாமக்கல் - 792
நீலகிரி - 425
பெரம்பலூர் - 82
புதுக்கோட்டை - 298
ராமநாதபுரம் - 169
ராணிப்பேட்டை - 246
சேலம் - 1,877
சிவகங்கை - 149
தென்காசி - 150
தஞ்சாவூர் - 439
தேனி - 201
திருப்பத்தூர் - 277
திருவள்ளூர் - 1,314
திருவண்ணாமலை - 534
திருவாரூர் - 484
தூத்துக்குடி - 502
திருநெல்வேலி - 437
திருப்பூர் - 1,022
திருச்சி - 587
வேலூர் - 514
விழுப்புரம் - 523
விருதுநகர் - 169
விமானநிலைய கண்காணிப்பு - 3

Tags :