தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை
By: Monisha Fri, 23 Oct 2020 09:48:34 AM
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 3 ஆயிரத்து 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 158
செங்கல்பட்டு - 1,515
சென்னை - 11,107
கோவை - 3,753
கடலூர் - 871
தர்மபுரி - 679
திண்டுக்கல் - 329
ஈரோடு - 867
கள்ளக்குறிச்சி - 284
காஞ்சிபுரம் - 630
கன்னியாகுமரி - 630
கரூர் - 310
கிருஷ்ணகிரி - 650
மதுரை - 742
நாகை - 479
நாமக்கல் - 792
நீலகிரி - 425
பெரம்பலூர் - 82
புதுக்கோட்டை - 298
ராமநாதபுரம் - 169
ராணிப்பேட்டை - 246
சேலம் - 1,877
சிவகங்கை - 149
தென்காசி - 150
தஞ்சாவூர் - 439
தேனி - 201
திருப்பத்தூர் - 277
திருவள்ளூர் - 1,314
திருவண்ணாமலை - 534
திருவாரூர் - 484
தூத்துக்குடி - 502
திருநெல்வேலி - 437
திருப்பூர் - 1,022
திருச்சி - 587
வேலூர் - 514
விழுப்புரம் - 523
விருதுநகர் - 169
விமானநிலைய கண்காணிப்பு - 3