Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 06 June 2020 12:58:22 PM

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது. 10,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 178-ஆக உள்ளது.

india,coronavirus,tamil nadu,chennai,raipur ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,ராயபுரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,552 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 2,202 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,958 பேருக்கும், அண்ணாநகரில் 1,784 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 2,470 பேரும், தேனாம்பேட்டையில் 2,245 பேரும், திருவொற்றியூரில் 731 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 996 பேருக்கும், பெருங்குடியில் 365 பேருக்கும், அடையாறில் 1,094 பேருக்கும், அம்பத்தூரில் 733 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 314 பேருக்கும், மாதவரத்தில் 536 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 362 பேருக்கும், மணலியில் 274 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|