Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை

By: Monisha Wed, 07 Oct 2020 09:38:37 AM

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 212 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 226
செங்கல்பட்டு - 2,629
சென்னை - 12,929
கோவை - 4,837
கடலூர் - 1,243
தர்மபுரி - 742
திண்டுக்கல் - 374
ஈரோடு - 1,040
கள்ளக்குறிச்சி - 342
காஞ்சிபுரம் - 886
கன்னியாகுமரி - 764
கரூர் - 373
கிருஷ்ணகிரி - 764
மதுரை - 690
நாகை - 502
நாமக்கல் - 1,075
நீலகிரி - 831
பெரம்பலூர் - 92
புதுக்கோட்டை - 643
ராமநாதபுரம் - 162
ராணிப்பேட்டை - 392
சேலம் - 2,604
சிவகங்கை - 207
தென்காசி - 297
தஞ்சாவூர் - 1,318
தேனி - 470
திருப்பத்தூர் - 425
திருவள்ளூர் - 1,749
திருவண்ணாமலை - 755
திருவாரூர் - 870
தூத்துக்குடி - 509
திருநெல்வேலி - 783
திருப்பூர் - 1,288
திருச்சி - 727
வேலூர் - 820
விழுப்புரம் - 666
விருதுநகர் - 225
விமானநிலைய கண்காணிப்பு - 28
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :