Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக மீனவர்கள் கைது..இலங்கை அரசுக்கு அன்புமணி கண்டனம்..

தமிழக மீனவர்கள் கைது..இலங்கை அரசுக்கு அன்புமணி கண்டனம்..

By: Monisha Tue, 12 July 2022 7:45:36 PM

தமிழக மீனவர்கள் கைது..இலங்கை அரசுக்கு அன்புமணி கண்டனம்..

தமிழ்நாடு: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர்.

கச்சத்தீவுக்கும் , கோடியக்கரைக்கும் இடைபட்ட நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்தனர்.

fisher man,government,attack,arrest ,மீனவர்கள் ,கைது,நடுகடல்,எல்லை,

அத்துடன் அவர்களின் படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 23 பேரையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags :
|