Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ..தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு

இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ..தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு

By: vaithegi Sat, 23 Sept 2023 3:42:48 PM

இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ..தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு


சென்னை: 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு .... தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தற்போது கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 100 இடங்களில் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்த தமிழக அரசின் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

employment,youth ,வேலைவாய்ப்பு   , இளைஞர்

எனவே இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு தொழில்நெறி வழிகாட்டு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் 100 சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பயிற்சிகளில் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பட வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Tags :