Advertisement

ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு இன்று ஒப்பந்தம்

By: vaithegi Thu, 11 May 2023 1:21:35 PM

ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு இன்று ஒப்பந்தம்

சென்னை: ஹூண்டாய் நிறுவனத்துடன், 20,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் .... தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பல முதலீடுகளை ஈர்த்து கொண்டு வருகிறது. சமீபத்தில் ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனத்துடன் ரூ.1,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், தமிழகத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது.

hyundai,government of tamil nadu ,ஹூண்டாய் ,தமிழக அரசு

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் ஹூண்டாய் தொழிற்சாலையை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

மேலும், மின்வாகன மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்படுகிறது.

Tags :