Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டு வாடகை குறித்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வீட்டு வாடகை குறித்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

By: Nagaraj Thu, 02 July 2020 6:24:24 PM

வீட்டு வாடகை குறித்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு... வீட்டின் உரிமையாளர்கள், குடியிருப்பவர்களிடம் மூன்று மாத காலத்திற்கு வாடகை கேட்கக் கூடாதென அரசாணை பிறப்பிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய வேண்டாம் என்ற மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகள் அரசாணை பிறப்பித்துள்ளதாக வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.

responsive,directive,government of tamil nadu,rental,homeowners ,
பதிலளிக்க, உத்தரவு, தமிழக அரசு, வாடகை, வீட்டு உரிமையாளர்கள்

ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை விவரத்தை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை தாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று நில மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags :
|