Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை ... முதல் அமைச்சர் முக ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை ... முதல் அமைச்சர் முக ஸ்டாலின்

By: vaithegi Thu, 22 Dec 2022 6:44:59 PM

தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை   ...  முதல் அமைச்சர் முக ஸ்டாலின்

சென்னை: சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி கொண்டு வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.

இதனை அடுத்து இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது.

prime minister,corona,a mutated new species ,முதல் அமைச்சர் ,கொரோனா ,உருமாறிய புதிய வகை


மேலும் ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. சீனாவில் உயர்ந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து இந்நிலையில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய முதல் அமைச்சர் தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. எந்தவித பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.மேலும் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார்

Tags :
|