தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடம்... மக்கள் நீதி மய்யம் தலைவர் கருத்து
By: Nagaraj Fri, 08 Sept 2023 07:30:40 AM
சென்னை: கமல் கருத்து... ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தைப் பற்றிய தனது கருத்துக்களுக்கு உரிமை உண்டு என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது சட்டரீதியான மிரட்டல் உத்திகள் அல்லது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உணர்ச்சிபூர்வமான பதில்களைத் தூண்டும் வகையில் அவரது வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதற்குப் பதிலாக, சனாதனத்தின் தகுதியின் அடிப்படையில் விவாதத்தில் ஈடுபடுவது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags :
kamal |
debate |