தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
By: vaithegi Fri, 09 June 2023 09:46:29 AM
சென்னை: நேற்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கி உள்ளது. மேலும் தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. கடந்த 7ம் தேதி காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் பிப்பர்சாய்” நேற்று முன்தினம் காலை 11:30 மணி அளவில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று,
வடக்கு இசையில் நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்க அரபிக்கடல் பகுதிகளில் கோவாவிலிருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த 3 தினங்களில் நகரக்கூடும்.
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரி இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் நாளை முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.