Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

தமிழகத்தில் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Mon, 24 July 2023 10:11:25 AM

தமிழகத்தில் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..  வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் அரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனை அடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 27.07.2023 மகல் 29.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

meteorological centre,rainfall , வானிலை ஆய்வு மையம்,மழை

வருகிற 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

Tags :