Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 25 May 2023 2:05:01 PM

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து தமிழகத்தில் மே 24-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலா 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறை, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை, நீலகிரி மாவட்டம் உதகையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியது.

rainfall,chennai meteorology ,மழை ,சென்னை வானிலை ஆய்வு

மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் வருகிற மே 28-ம் தேதி வரை செல்ல வேண்டாம்.

திருத்தணி, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சிராப்பள்ளி, மதுரை நகரத்தில் தலா 102 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி, கடலூர், ஈரோடு, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பதிவானது. நாகப்பட்டினத்தில் 99 டிகிரி பதிவானது. தமிழகத்தில் வரும் நாட்களில் இதேபோன்று வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Tags :