Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

By: vaithegi Mon, 17 Apr 2023 10:01:30 AM

விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் தாக்கல் செய்தனர்.

அதன்பின் தொடர்ந்து 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகின்றனர்.

tamil nadu legislative assembly,holiday ,தமிழக சட்டப்பேரவை,விடுமுறை


இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு, 15-ம் தேதி சனிக்கிழமை, 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.

கூட்டம் தொடங்கியதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனை அடுத்து இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.

மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பேசுவர். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிடுவார். தொடர்ந்து ஏப்ரல் 21-ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.

Tags :