தமிழகத்தில் நவம்பர் 26, 27, 28, 29, 30 ஆகிய 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்
By: vaithegi Sat, 26 Nov 2022 3:31:47 PM
சென்னை: 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் ... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனை அடுத்து இரவு, பகலாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒட்டியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 26, 27, 28, 29, 30 ஆகிய 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 – 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.